இந்தியாவில் முதன்முறையாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு – சென்னை மே21ம் நாள் சனிக்கிழமை

Link: https://www.einpresswire.com/article/573340534/21 இந்தியாவில் முதன்முறையாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு – சென்னை மே21ம் நாள் சனிக்கிழமை NEWS PROVIDED BY Prof Saraswathi, Transnational Government of Tamil Eelam (TGTE) May 20, 2022, 19:39 GMT SHARE THIS ARTICLE

நேரடி நிகழ்வினை காண: www.tgte.tv — Facebook: @mediatgte Time: India: 5:00 pm, Canada: 7:30 am / UK: 12:30 pm / Australia: 9:30 pm.

சென்னை, தமிழ்நாடு, May 20, 2022 /EINPresswire.com/ —

இந்தியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுகளை தீவிரப்படுத்தும் வகையில், தனது அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வினை தமிழ்நாட்டின் சென்னைப் பெருநகரில் நா.தமிழீழ அரசாங்கம் நடாத்துகின்றது.

கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின்னராக நடைபெறுகின்ற நேரடி பொதுநிகழ்வாக இது அமைவதோடு, மூன்றாவது தவணைக்காலத்தின் ஏழாவது அமர்வாக மே21ம் நாள் சனிக்கிழமை இடம்பெறுகின்றது.

அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தமிழீழ ஆதரவாளர்கள் என பேராளர்கள் பலரும் பங்கெடுக்கும் இந்நிகழ்வில் ‘ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு’ ‘சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்’ ஆகிய தொனிப்பொருட்களில் கருத்தமர்வுகள் இடம்பெறுகின்றன.

மூத்த ஊடகர் திரு.அய்யநாதன், தோழர் தியாகு, தோழர் பாமரன், பேராசிரியர் ஹாஜா கனி, மூத்த ஊடகர் தோழர் தெ.சி.சு.மணி, முனைவர் பேராசிரியர் நாகநாதன், முனைவர் பேராசிரியர் மணிவண்ணன், தோழர் ச.அ.சௌரிராசன் ஆகியோர் இக்கருத்தமர்வுகளில் பங்கெடுக்கின்றனர்.

கனடா, பிரித்தானியா, ஒஸ்றேலியா ஆகிய நாடுகளில் இருந்து அந்நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களது வாழ்த்துரைகளும் இடம்பெற இருக்கின்றன.

மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்கள் வாழ்த்துரை வழங்க, மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி அவர்கள் சிறப்புரை வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தலைமையுரையினை வழங்குகின்றார்.

இந்திய நேரம் மாலை 5 மணிக்கு இடம்பெறுகின்ற இந்த நேரடி நிகழ்வினை நா.தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சி வழியாகவும் காணலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TGTE Parliament Meets In-Person in Chennai, India on May 21st. Several Dignitaries to Address https://www.einpresswire.com/article/573314026/tgte-parliament-meets-in-person-in-chennai-india-on-may-21st-several-dignitaries-to-address

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நா.க.த.அ. இன் பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

மின்னஞ்சல் முகவரி: pmo@tgte.org இணையத்தள முகவரி: www.tgte-us.org கீச்சக முகவரி: @TGTE_PMO

Prof Saraswathi Transnational Government of Tamil Eelam (TGTE) +91 94441 45803 prof.saraswathi@gmail.com Visit us on social media: Facebook Twitter

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*