பாரிஸ் – மார்ச் 16, 2024
பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களுக்கான வேட்பு மனுதாக்கல் மார்ச்16 முதல் ஆரம்பம் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களுக்கான வேட்பு மனுதாக்கல் மார்ச்16 முதல் ஆரம்பம்
– நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அவைக்கான, பிரான்ஸ் நாட்டுப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், எதிர்வரும் 05 – 05 – 2024 அன்று பிரான்சில் நடைபெற உள்ளது என்பதைப் பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களுக்கு அறியத்தருகிறோம்.
மொத்தம் 10 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட உளளனர். இவ்வகையில், பின்வரும் தொகுதிகளுக்கான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.
75 – Paris
78 – Yvelines
92 – Hauts – de – Seine
94 – Val de Marne
Nord du France
77 – Seine – et – Marne
91 – Essonne
93 – Seine – Saint – Denis
95 – Val – d’Oise
Sud du France
மேற்குறித்த தொகுதிகளில் வாழ்பவர்கள் அந்தந்த தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிற் போட்டியிடுவார்கள்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக் காலத்துக்கான வேட்புமனுதாக்கல் மார்ச் 16ஆம் நாளன்று தொடங்குகின்றது. வேட்புமனுத் தாக்கல் முடிவுத் திகதி – நேரம் ,14 – 04 – 2024 மாலை 6.00 மணி கட்டுப்பணம் – 500, 00 யூறோக்கள்.
இத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய விரும்புவர்கள் கீழ்க்காணும் முகவரியில்
17 rue Philip Girard 75010 Paris திங்கள், செய்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமை நாட்களில், மாலை 03 மணி தொடக்கம் 06 மணி வரை, இதற்குரிய விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிகவிபரங்களுக்கு
: puthulaku@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியூடாக அல்லது www.tgte-us.org / www.tgte.org மற்றும் இணையம் ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்.
இவ்வண்ணம்
குமாரசாமி பரராசா
தேர்தல் ஆணையாளர் – பிரான்ஸ்