Back

ஊடகச்செய்தி                                                                                                                                                                                                                                                                                       சூரிச்- மார்ச்  31, 2024

பெனேலக்ஸ் நாடுகளில் 3 பிரதிநிதிகளுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்  வேட்பு மனுதாக்கல்  தொடங்குகின்றது  – மே 5, 2024இல் பொதுத் தேர்தல்

2010 ஆம் ஆண்டு முதல் தமிழீழ மக்களின் நீதிக்கும், மக்களின்  இறையாண்மைக்கும் போராடிவருகின்ற  ஜனநாயக வடிவமாக நேர்கொண்ட கொள்கையுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்  செயற்பட்டு வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே!  அதன் நான்காவது தவணைக்கான  தேர்தல் பெல்ஜியம், நெதர்லாந்து, லுக்ஸேம்பேர்க் ஆகிய நாடுகளில் , 3 பிரதிநிதிகளுக்கான  வேட்பு மனுதாக்கல்  மார்ச் 31, 2024 என சுவிஸ் மற்றும் பெனேலக்ஸ் (Benelux) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்  தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

பெனேலக்ஸ் நாடுகளில்  மூன்று  தேர்தல்  பிராந்தியங்களாக  பிரிக்கப்பட்டு அவற்றிலிருந்து முறைப்படி 3 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.  தமிழ் மக்களைப்  பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளன.

  அவை பின்வருமாறு: 
  1. Belgium – 1 பிரதிநிதி
  2. Netherland – 1 பிரதிநிதி
  3. Luxembourg – 1 பிரதிநிதி
 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்  காலத்துக்கான வேட்புமனுதாக்கல்  மார்ச் 31ஆம் நாளன்று  தொடங்கி எதிர்வரும்  ஏப்ரல் 15ஆம் திகதி நள்ளிரவு  வரை  வேட்புமனுதாக்கல்  ஏற்றுக்  கொள்ளப்படும்.

எதிர்வரும் மே 05, 2024 அன்று பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

தேர்தல் நடைமுறை விதிகள், வேட்புமனுக்கள் மற்றும் இதர விடயங்கள்  சுவிஸ் மற்றும்  பெனேலேஸ்  தேர்தல் ஆணையத்தின் குறித்த  மின்னஞ்சல் வழியே  பெற்றுக் கொள்ளலாம்.

  மேலதிக தொடர்புகளுக்கு : 

+41 79 892 87 11

நன்றி.

செல்லையா குலசேகரராஜசிங்கம்

தேர்தல் ஆணையாளர். சுவிற்சர்லாந்து