தமிழர் தாயகத்தில் 25ம் திகதி நடைபெற உள்ள முழுமையான முடக்கத்திற்கு (ஹர்தால்) நாடுகடந்த அரசாங்கம் முழுமையான ஆதரவு

Link: https://www.einpresswire.com/article/629630588/25

போராட்டம் வெற்றி பெற அணைவரையம் ஒத்துழைக்குமாறும், பங்கு பெற்றுமாறும், அன்பாகவம், உரிமையுடன் வேண்டுகின்றோம்.

ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழினத்திற்காக செயலாற்றுவதை நாடுக கடந்த அரசாங்கம் வரவேற்பதுடன் தமிழர்களின் விடுதலைக்காக ஏனைய தமிழ் தேசிய சக்திகளும் இணைவது காலத்தின் கட்டாயம்”— நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன்NEW YORK, UNITED STATES, April 24, 2023/EINPresswire.com/ —

அனைத்து ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகள் இனணந்து வரும் 25ம் திகதி செவ்வாய்கிழமை இரு பிரதான கோரிக்கைகளை முன் நிறுத்தி முழமையாக தமிழர் தாயகத்தை முடக்கி தமிழர்களின் முழுமையான எதிர்பையும், இனியம் தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எனபதனை சர்வதேசத்திற்கும் , சிங்களப்பேரின்ன வாத்த்தை எச்சரிக்கும் முகமாகவம் நடைபெற உள்ளதால் தாயகமே திரண்டு வெற்றி பெறச் செய்யுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அன்பாகவம், உரிமையுடனும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மிக முக்கிய கோரிக்கைகளான பயங்கரவாத எதிப்புச்சட்ட மூலம் என்ற சிங்களப் பேரினவாத அரசின் திட்டத்தை தோற்கடிப்பது, தமிர்களின் மரபுவழித்தாயகமான வடக்கு , கிழக்கில் எமது வரலாற்றுப் பாரம்பரியத்தையும், தொண்மையும் சிதைக்கும் நோக்குடன் தமிழர்களின் தொண்மையான வழிபாட்டுத் தலங்கள் மீது திட்ட மிட்டு நடை பெறும் சிதைப்புகள், தாக்குதல்களை தடுத்து நிறுத்துதல்.

இப் இரு முக்கிய கோரிக்கைகளோடு ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழினத்திற்காக செயலாற்றுவதை நாடுக கடந்த அரசாங்கம் வரவேற்பதுடன் தமிழர்களின் விடுதலைக்காக ஏனைய தமிழ் தேசிய சக்திகளும் இணைவது காலத்தின் கட்டாயம் என்பத்தை வலி உறுத்தி நிற்கின்றது. மீண்டும் போராட்டம் வெற்றி பெற அணைவரையம் ஒத்துழைக்குமாறும், பங்கு பெற்றுமாறும், உரிமையுடனும் வேண்டுகின்றோம்.

தமிழரின் தலைவிதி தமிழர் கையில். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

  • நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி About Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

Follow us on Twitter: @TGTE_PMO Email: pmo@tgte.org Web: www.tgte-us.org, www.tgte.org Visuvanathan Rudrakumaran Transnational Government of Tamil Eelam (TGTE) +1 614-202-3377 r.thave@tgte.org

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*