நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றம் அமெரிக்காவில் மே 19ஆம் திகதி முதல் 21ஆம்திகதி வரை கூடுகிறது

Link: https://www.einpresswire.com/article/634294457/19-21

NEWS PROVIDED BY Transnational Government of Tamil Eelam, TGTE May 17, 2023, 18:44 GMT SHARE THIS ARTICLE

  • போகன்வில்லா சுயாட்சி பிராந்தியத்தின் முன்னாள் அதிபர் மதிப்புக்குரிய ஜேம்ஸ் டனிஸ் தலைமையுரை ஆற்றவுள்ளார்.—- * பல சர்வதேசபிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளனர்.

உலகெங்கிலுமுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மேலவை உறுப்பினர்கள், ஆலோசனை குழு உறுப்பினர்கள், நெறிமுறை குழு உறுப்பினர்கள், தேர்தல் ஆணைக்குழு ஆகியோர் கலந்து கொள்வார்கள்”— நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்NEW YORK CITY, UNITED STATES, May 17, 2023/EINPresswire.com/ —

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்றத்தின் ஒன்பதாவது நேரடியமர்வானது மே மாதம்19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூ யோர்க் மாநகரத்தில் நடைபெறவுள்ளது.

போகன்வில்லா சுயாட்சி பிராந்தியத்தின் முன்னாள் அதிபர் மதிப்புக்குரிய ஜேம்ஸ் டனிஸ் தலைமையுரை ஆற்றவுள்ளார்.

பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின்போது பல சர்வதேசபிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளனர்.

உலகெங்கிலுமுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாடு கடந்த தமிழீழஅரசாங்கத்தின் மேலவை உறுப்பினர்கள், அதன் ஆலோசனை செயற்குழு உறுப்பினர்கள், நெறிமுறைஆணைக்குழு உறுப்பினர்கள், தேர்தல் ஆணைக்குழு ஆகியோர் கலந்து கொள்வார்கள்

இந்த அமர்வானது இந்து சமுத்திரத்தில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம், சுதந்திரமான மற்றும்இறைமையுள்ள தமிழீழ அரசின் உருவாக்கத்தில் உலகத் தமிழர்களின் வகிப்பாகத்தை கவனம் செலுத்தவுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு முக்கியமான சில விடயங்கள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்பாராளுமன்றமானது விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நாளில் தமிழ்த் தேசியப் போராட் டத்தில், எதிர்வரும் ஆண்டுகளில் அதன் முன்னுரிமைகளில் இந்தபாராளுமன்ற அமர்வின்போது உறுப்பினர்களால் பின்வரும் நான்கு விடயங்களும் கருத்தில் கொள்ளப்படும்:

  1. இந்து சமுத்திரத்தில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கம்
  2. சுதந்திரமான மற்றும் இறைமையுள்ள தமிழீழ அரசின் உருவாக்கத்தில் உலகத் தமிழர்களின் வகிபாகம்
  3. பொதுவாக்கெடுப்பிற்கான மக்கள் இயக்கம்
  4. தேசத்தை கட்டியெழுப்புதல்

இந்த அமர்வில் குறிப்பிட்ட தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவைஅமைச்சர்களின் அறிக்கைகளும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வருடாந்த வரவு செலவுத் திட்டமும்பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

  • நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி About Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

Follow us on Twitter: @TGTE_PMO Email: pmo@tgte.org Web: www.tgte-us.org, www.tgte.org Transnational Government of Tamil Eelam TGTE +1 614-202-3377 r.thave@tgte.org Visit us on social media: Facebook Twitter Instagram

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*